In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Sunday, March 6, 2022

Do Not be Troubled | Tamil sermon out


*Do Not be Troubled*


*1. Beginning of Sorrows*


மத்தேயு (Matthew) 24:6-8 - யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; *கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்*; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், *முடிவு உடனே வராது*.


7. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.


8. *இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்*.



*2. Endure till the End*


மத்தேயு (Matthew) 24:12-13 - அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய *அன்பு தணிந்துபோம்*.


13. *முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்*.


மத்தேயு (Matthew) 24:45-46 - ஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த *உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் யாவன்?*


46. எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே *பாக்கியவான்*.



*3. Powers in heaven shall be shaken*


மாற்கு (Mark) 13:25-26 - வானத்தின் நட்சத்திரங்கள் விழும், *வானங்களிலுள்ள சத்துவங்களும் அசைக்கப்படும்*.


26. *அப்பொழுது* மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.


எபிரெயர் (Hebrews) 12:26-29 - அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப்பண்ணிற்று; *இன்னும் ஒருதரம் நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேன்* என்று இப்பொழுது வாக்குத்தத்தஞ்செய்திருக்கிறார்.


27. இன்னும் ஒருதரம் என்கிற சொல்லானது *அசையாதவைகள் நிலைத்திருக்கத்தக்கதாக, அசைவுள்ளவைகள் உண்டாக்கப்பட்டவைகள்போல் மாறிப்போம்* என்பதைக் குறிக்கிறது.


28. ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.


29. *நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே*.


ஆகாய் (Haggai) 2:21-22 - நீ யூதாவின் தலைவனாகிய செருபாபேலோடே சொல்லவேண்டியது என்னவென்றால், *நான் வானத்தையும் பூமியையும் அசையப்பண்ணி*,


22. *ராஜ்யங்களின் சிங்காசனத்தைக் கவிழ்த்து, ஜாதிகளுடைய ராஜ்யங்களின் பெலத்தை அழித்து, இரதத்தையும் அதில் ஏறியிருக்கிறவர்களையும் கவிழ்த்துப்போடுவேன்*; குதிரைகளோடே அவைகளின்மேல் ஏறியிருப்பவர்களும் அவரவர் தங்கள் தங்கள் சகோதரனின் பட்டயத்தினாலே விழுவார்கள்.



*4. Redemtion is Near*


லூக்கா (Luke) 21:25-28 - சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; *பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும்*.


26. வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்; ஆதலால் *பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்*.


27. *அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள்*.


28. *இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்* என்றார்.



*5. Redeem the Time*


கொலோசெயர் (Colossians) 4:5 - புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து, *காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்*.


எபேசியர் (Ephesians) 5:15-17 - ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து,


16. *நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்*.


17. ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.



*6. Do Not be Troubled*


மத்தேயு (Matthew) 8:24-26 - 24. அப்பொழுது படவு அலைகளினால் மூடப்படத்தக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று; அவரோ நித்திரையாயிருந்தார்.


25. அப்பொழுது, அவருடைய சீஷர்கள் வந்து, அவரை எழுப்பி: *ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம்* என்றார்கள்.


26. அதற்கு அவர்: *அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள்* என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே, மிகுந்த அமைதலுண்டாயிற்று.


மத்தேயு (Matthew) 10:28 - ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், *சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்*; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.


லூக்கா (Luke) 12:7 - *உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது*, ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.


ஏசாயா (Isaiah) 8:12-13 - 12. இந்த ஜனங்கள் கட்டுப்பாடு என்று சொல்லுகிறதையெல்லாம் நீங்கள் கட்டுப்பாடு என்று சொல்லாமலும், *அவர்கள் பயப்படுகிற பயத்தின்படி நீங்கள் பயப்படாமலும், கலங்காமலும்*,


13. சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம்பண்ணுங்கள்; *அவரே உங்கள் பயமும், அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக*.


சங்கீதம் (Psalm) 91:5-7 -  5. *இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும்*,


6. இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்.


7. *உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது*.


வெளி (Revelation) 3:10 - என் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் *பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைக்காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்*.


2 பேதுரு (Peter) 2:9 - *கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும்*, அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.


சங்கீதம் (Psalm) 112:1 - அல்லேலூயா, *கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்*.


சங்கீதம் (Psalm) 112:7 - *துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்*.


நீதிமொழிகள் (Proverbs) 3:25-26 - 25. *சடிதியான திகிலும், துஷ்டர்களின் பாழ்க்கடிப்பும் வரும்போது நீ அஞ்சவேண்டாம்*.


26. கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.


ஆபகூக் (Habakkuk) 3:17-18 - 17. அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும்,


18. *நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்*.


சங்கீதம் (Psalm) 46:1-3 - 1. தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.


2. ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும்,


3. *அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம்*.


யோவான் (John) 14:27 - சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. *உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக*.


2 தீமோத்தேயு (Timothy) 1:7 - தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், *பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்*.


1 யோவான் (John) 4:18 - *அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல*.



*7. Watch = Pray*


மாற்கு (Mark) 13:35-37 - அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனெனில், வீட்டெஜமான் சாயங்காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள்.


36. நீங்கள் நினையாத வேளையில் அவன் வந்து, உங்களைத் தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள்.


37. *நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள்* என்றார்.


மாற்கு (Mark) 13:33 - அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், *விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்*.


லூக்கா (Luke) 21:34-36 - உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், *நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்*.


35. *பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும்*.


36. ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, *எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்*.


கொலோசெயர் (Colossians) 4:2 - *இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்*, ஸ்தோத்திரத்துடன் *ஜெபத்தில் விழித்திருங்கள்*.


எபேசியர் (Ephesians) 6:18 - எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் *சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்*.


1 பேதுரு (Peter) 4:7 - எல்லாவற்றிற்கும் *முடிவு சமீபமாயிற்று*; ஆகையால் *தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து (Watch), ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்*.


வெளி (Revelation) 3:3 - ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. *நீ விழித்திராவிட்டால்*, திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய்.


2 பேதுரு (Peter) 3:14 - ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் *கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே* அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.


கலாத்தியர் (Galatians) 6:9 - *நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக*; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.



*8. We know the Prohecies*


மாற்கு (Mark) 13:23 - *நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள்; இதோ, எல்லாவற்றையும் முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்*.


யோவான் (John) 14:29 - *இது நடக்கும்போது நீங்கள் விசுவாசிக்கும்படியாக*, நடப்பதற்குமுன்னமே இதை உங்களுக்குச் சொன்னேன்.


2 பேதுரு (Peter) 3:17 - ஆதலால் பிரியமானவர்களே, *இவைகளை முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால், அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து*,


18. *நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்*. அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.


2 பேதுரு (Peter) 1:5-10 - 5. இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் *விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும்*,


6. *ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும்*,


7. *தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும்* கூட்டி வழங்குங்கள்.


8. *இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால்*, உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது.


9. இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான்.


10. ஆகையால், *சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை*.

No comments:

Post a Comment

Post Top Ad