In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Wednesday, August 4, 2021

தீமைக்குப் பதில் நன்மை செய்தவர்கள் | Tamil sermon points | sermon outlines tamil

 *தீமைக்குப் பதில் நன்மை செய்தவர்கள்* 


  

 *1. யோசேப்பு* : யோசேப்பு தன் சகோதரர்களால் குழிவாழ்க்கையும், சிறைவாழ்க்கையும் அனுபவித்தான். அப்படியிருந்தும் அவர்கள் செய்த தீமைகளை மன்னித்து, அவர்களைக் கண்டவுடன் முத்தஞ் செய்து, அழுது அவர்களைப் பராமரித்தான் – ஆதி 45:15


2 *. மோசே* : மோசே விவாகம் பண்ணின எத்தியோப்பிய ஸ்திரீயினிமித்தம் மிரியாமும், ஆரோனும் அவனுக்கு விரோதமாகப் பேசினார். அதனால் கர்த்தர் கடுங்கோபங் கொண்டு மிரியாமை குஷ்டரோகியாக்கினார். ஆனால் மோசே அவர்களை மன்னித்து அவளுக்காக கர்த்தரிடம் கெஞ்சி சுகம் கிடைக்கச் செய்தான் – எண் 12:13


3. *தாவீது* : சவுல் ராஜா தாவீதைக் கொலை செய்ய எத்தனையோ தடவைகள் முயற்சி செய்தான். அவனுக்குப் பயந்து தாவீது ஓடிக்கொண்டேயிருந்தான். ஆனால் சவுலைக் கொல்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தும் தாவீது அவனைக் கொல்லவில்லை. – 1சாமு 24:1 – 7


 *4. இஸ்ரவேலின் ராஜா:* எலிசா சீரிய ராஜாவின் படைகளை சமாரியாவிலிலுள்ள இஸ்ரவேல் ராஜாவிடம் ஒப்படைத்தான். அப்பொழுது ராஜா எலிசாவிடம் அவர்களை வெட்டிப் போடலாமா” என்று கேட்டதற்கு எலிசா அவர்களுக்கு விருந்து கொடுத்து அனுப்பச் சொன்னான் – 2இரா 6:22, 23


5. *இயேசு:* இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில் ஒருவனை பேதுரு வலது காதற வெட்டினான். அப்பொழுது இயேசு அவனை நிறுத்தச் சொல்லி அந்தக் காதைத் தொட்டு சொஸ்தமாக்கினார் – லூக் 22 :50,: 51


6. *ஸ்தேவான்:* ஸ்தேவானை மக்கள் கல்லெறிந்து துன்பப்படுத்தினர். ஆனால் அவனோ ஆண்டவரிடம் “இவர்கள் மேல் இந்தப் பழியைச் சுமத்தாதிரும்” என்று வேண்டி தன் ஆவியை விட்டான் – அப் 7: 54 – 60

No comments:

Post a Comment

Post Top Ad