*எது நல்லது ?*
*சங்கீதம் 63:3*
ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது, என் உதடுகள் உம்மைத் துதிக்கும்.
*1.தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது*
========================
*சங்கீதம் 147:1*
1 கர்த்தரைத் துதியுங்கள், நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது.
*2.கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது*
========================
*புலம்பல் 3:26*
கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.
*3.நல்விஷயத்தில் வைராக்கியம் பாராட்டுவது*
=======================
*கலாத்தியர் 4:18*
நல்விஷயத்தில் வைராக்கியம் பாராட்டுவது நல்லதுதான். அதை நான் உங்களிடத்தில் இருக்கும்பொழுதுமாத்திரமல்ல, எப்பொழுதும் பாராட்டவேண்டும்.
*4.உபத்திரவப்படுவது நல்லது*
========================
*சங்கீதம் 119:71*
நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது, அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.
*5.ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதின் முடிவு நல்லது*
========================
*பிரசங்கி 7:8*
ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதின் முடிவு நல்லது, பெருமையுள்ளவனைப்பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்.
*6.இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது நல்லது*
========================
*புலம்பல் 3:27*
தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது.
*7.கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது*
========================
*எபிரேயர் 13:9*
பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள்.போஜனபதார்த்தங்களினாலல்ல, கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது. போஜனபதார்த்தங்களில் முயற்சிசெய்கிறவர்கள் பலனடையவில்லையே.
========================
No comments:
Post a Comment