In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Thursday, April 29, 2021

Tamil sermon outlines | Warning! Those who watching television | Tamil Christian message | Tamil sermons

 தேவ ஜனமே கரும்பெட்டிக்கு (டி.விக்கு) விலகி ஓடுங்கள்


"பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்" (1 தெச 5 : 22) " படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக, மனுவைப் படைத்தான் தன்னை வணங்க" என்று தமிழிலே ஒரு முதுமொழி உண்டு என்பது நமக்குத் தெரியும். நமது திருச்சபை ஞானோபதேச வினா விடைகளில் மானிட வாழ்வின் பிரதான நோக்கம் என்ன என்பதற்கு "கர்த்தரை மகிமைப்படுத்துவதற்கும், அவரில் சதா நிலைத்திருந்து மகிழ்ந்து களிகூருவதற்குமே" (Man's chief end is to glorify God and enjoy him forever) என்று விடை கொடுக்கப்பட்டுள்ளது.


முடிவில்லாத யுகா யுகங்களை, காலம் காட்டும் கடிகாரமில்லாத முடிவில்லா நித்தியத்தை நம் அன்பின் ஆண்டவர் இயேசுவோடு பரலோகில் செலவிட நாம் நம்மை நன்கு ஆயத்தப்படுத்திக் கொள்ளுவதற்காக மாத்திரமே நமது பூலோக வாழ் நாட்காலம் நமக்குக் கிருபையாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் கிருபையின் காலம் சிலருக்கு சற்று கூடுதலாகவும், சிலருக்கு குறைவாகவும் அளிக்கப்பட்டுள்ளது. சிலர் இந்த உலகில் நல்ல பூரண தீர்க்காயுளோடு சுகமாக நீண்ட நாட்கள் வாழ்கின்றனர். ஆனால், சிலர் நல்ல வாலிப அல்லது நடுத்தர வயதிலேயே தங்களுக்கு அன்பான மனைவி, பாசமுள்ள மக்களை விட்டு மரணத்தின் மூலமாக சடுதியாகக் கடந்து சென்று விடுகின்றனர்.


நாம் எந்த ஒரு விதத்திலும் ஆண்டவர் இயேசுவோடு பரலோகில் வாழச்சென்று விடக் கூடாது என்பதற்காக மனுஷ கொலை பாதகனான தந்திர சாத்தான் இந்த உலகத்தில் நமது கவனத்தை திசை திருப்ப பற்பலவிதமான ஏதுக்களை நமது ஆத்துமாவுக்கு எதிரான கண்ணியாக வைத்திருக்கின்றான். நமக்கும் நம் ஆண்டவருக்கும் நேரடியாக எந்த ஒரு பரலோக ஐக்கியமும் இல்லாத விதத்தில் அவன் நம்மை பிரித்து வைத்துக் கொண்டிருக்கின்றான். அதைத்தான் அவன் ஏதேன் பூங்காவில் செய்து நமது ஆதி தாய் தந்தையரை தேவனை விட்டுப் பிரித்து வைத்திருந்தான். அந்தக் காரியத்தில் பொல்லாங்கனுக்கு இந்தக் கடைசி நாட்களில் மிகவும் கை கொடுத்து உதவும் ஒரு அற்புத சாதனம் கரும் பெட்டியாகும். ஆம், அதுதான் டி.வி. என்ற தொலைக்காட்சி பெட்டியாகும்.


இந்தக் கொடிய சாதனத்தின் மூலமாக சத்துரு இன்று முழு உலகத்தையே தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து வைத்திருக்கின்றான். எல்லா ஏழை எளிய மக்களின் வீடுகளிலும் கூட கரும் பெட்டி நுழைந்து விட்டது. முற்றும் இலவசமாக அவைகளை சத்துரு வாரி வழங்கி விட்டான். காலை முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை மக்கள் அதையே பார்க்க வீடுகளில் முடங்கிவிட்டனர். அவைகளில் வரும் அசுத்தமான படங்களைப் பார்த்து பெண் பிள்ளைகளும், பையன்களும் எவ்வளவாக தங்களை கெடுத்துக் கொண்டார்கள் என்பதை நான் உங்களுக்கு இங்கு விவரிக்க வேண்டிய அவசியமில்லை. பள்ளிகள், கல்லூரிகளுக்குச் செல்லும் ஆண், பெண் இரு பாலரின் வாயிலிருந்து புறப்படும் வார்த்தைகளை நீங்களே கவனித்து அறிந்து கொள்ளலாம். ஒரு சமயம் ஒரு பெண்கள் மேல் நிலை பள்ளி ஆசிரியை ஒருவர் என்னிடம் "எங்கள் பள்ளியில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கு நாங்கள் எங்கள் மாணவிகளுக்கு எந்த ஒரு நடனப் பயிற்சி போன்றவைகளை இந்த நாட்களில் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியமே கிடையாது. பிள்ளைகளுக்கு சொல்லிவிட்டால் போதும் அவர்கள் தங்கள் வீட்டு தொலைக்காட்சி பெட்டியில் தாங்கள் பார்த்ததின்படி சினிமா நடிகை என்ன என்ன கலர் வளையல்கள் தனது கரங்களில் போட்டிருந்தாளோ அவைகளை எல்லாம் அப்படியே கடைகளில் சென்று தங்கள் கரங்களில் வாங்கிப் போட்டு நடிகையின் நடிப்பையும், பாட்டையும் அப்படியே சற்றும் பிசகில்லாமல் எங்கள் பள்ளி மேடையில் ஆடித் தீர்த்துவிடுவாள். அதற்கு, மேல் வகுப்புகளில் படிக்கும் பெரிய பெண் பிள்ளைகள் தேவை இல்லை. வெறும் ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுபெண் பிள்ளையே போதுமானவள்" என்று கூறினார்கள். ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா? தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை சின்னஞ்சிறார்கள் கூட எத்தனை உன்னிப்பாக கவனித்து சினிமாப் பாட்டுகளையும், நடனங்களையும் எவ்வளவாக கற்றுக் கொண்டார்கள் பாருங்கள். இவைகளுக்குப் பின்னணியத்தில் ஆத்தும அழிம்பன் சாத்தான் நின்று கொண்டு புன்முறுவல் செய்வதை உங்களால் காண முடிகின்றதா? தங்கள் வீடுகளிலுள்ள கரும் பெட்டிகளில் வரும் கொலை வெறி படங்களைப் பார்த்து சென்னையிலுள்ள ஒரு மாணவன் தனக்கு பாடம் கற்பித்த தனது வகுப்பு ஆசிரியையே கத்தியால் குத்தி கொலை செய்ததை நாம் கேள்விப்பட்டோம். பேரதிர்ச்சியடைந்தோம். சிறு பாலகர்களுக்கு வீடியோ விளையாட்டுகள் முதல் வாலிபர், நடுத்தர வயதினர், கிழவர்கள் வரை சுவை சுவையான நிகழ்ச்சிகள் என்று வகை வகையான தொடர்களை சத்துரு தனது பண்டகசாலையிலிருந்து இரவும் பகலும் வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றான். இந்தக் காரியத்தில் அவன் கஜானா என்றுமே காலியாவதில்லை. சாறிபாத் ஊர் விதவையின் பானையின் மாவும், கலசத்தின் எண்ணெயும் எடுக்க எடுக்க வந்து கொண்டிருந்தது போல பொல்லாங்கனின் பானையும், கலசமும் பொங்கி வழிந்து கொண்டே இருக்கின்றது.


இதில் கிறிஸ்தவ மக்களையும் சத்த

No comments:

Post a Comment

Post Top Ad