In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Wednesday, March 9, 2022

வேதத்தில் உள்ள கெட்ட பெண்கள் | Sunday sermon tamil

 Tamil Sermon Points

*வேதத்தில் உள்ள கெட்ட பெண்கள்*



1) போத்திபாரின் மனைவி = யோசேப்பை பாவம் செய்ய பலவந்தம் பண்ணினாள் (ஆதி 39:7-20)


2) ஆமானின் மனைவி சிரேஷ் = மொர்தெகாயை தூக்கில் போட 50 முழு உயரமான தூக்கு மரம் செய்ய தன் புருஷனுக்கு ஆலோசனை சொன்னவள் (எஸ்தர் 5:14, 7:9)


3) அனனியாவின் மனைவி சப்பீராள் = பேதுருவிடம் துணிகரமாய் பொய் சொல்லி தன் புருஷனோடு அந்நேரமே விழுந்து செத்தாள் (அப்போ 5:1-11)


4) பிலிப்புவின் மனைவி ஏரோதியாள் = ராஜாவாகிய ஏரோதோடு விபச்சாரம் செய்தது மட்டுமின்றி யோவான் ஸ்நானனைக் கொலை செய்யவும் காரணக்காரியாயிருந்தாள் (மாற் 6:17-29, மத் 14:3-11)


5) ஆதாமின் மனைவி ஏவாள் = கனியை புசித்து தானும் பாவம் செய்து தன் புருஷனையும் பாவம் செய்யப் பண்ணினாள் (ஆதி 3:6)


6) லோத்தின் மனைவி = லோத்தின் மனைவி ஜீவன் தப்ப மலைக்கு ஓடிப்போகும் போது பின்னிட்டு பார்த்து உப்புத்தூண் ஆனாள் (ஆதி 19:26)


7) யோபுவின் மனைவி = புருஷனிடம் ஏராளமான நன்மைகள் பெற்றவள் துன்ப காலத்தில் புருஷனை பார்த்து "தேவனை தூஷித்து ஜீவனை விடும்" என்றாள் (யோபு 2:9,10/19:17)


8) உரியாவின் மனைவி பத்சேபாள் = தாவீது கண்டு இச்சித்து பாவம் செய்யக்கூடிய நிலையில் ஸ்நானம் பண்ணினாள் (2 சாமு 11:1-17)


9) ஆகாபின் மனைவி யேசபேல் = பொல்லாப்பு செய்ய தன் புருஷனை தூண்டிவிட்டாள் (1 இராஜ 18:13)


10) தாவீதின் மனைவி மீகாள் = தன் புருஷன் ஆடி பாடுவதை கண்ட அவள் தன் இருதயத்தில் அவனை அவமதித்தாள் (2 சாமு 6:14-16)


11) மாகாள் = (யெரோபெயாமின் மனைவி) தன் கணவன் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்யாத போது அந்த தவறை சீர்படுத்தாமல் அவனை போலவே தானும் கர்த்தருடைய பார்வைக்கு அருவருப்புகளை செய்து வந்தாள் (2 இராஜ 15:3)


12) மார்த்தாள் = தேவ சமுகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை, அநேக காரியங்களை குறித்து கவலைப்பட்டு கலங்கினாள் - லூக் 10:39-42


13) தீனாள் = ஊர் சுற்ற போனாள் - ஆதி 34:1-31


14) புத்தியில்லாத கன்னிகை = மணவாளன் வருகைக்கு ஆயத்தமாயிருக்கவில்லை - மத் 25:1-10

No comments:

Post a Comment

Post Top Ad