Tamil Sermon Points
*வேதத்தில் உள்ள கெட்ட பெண்கள்*
1) போத்திபாரின் மனைவி = யோசேப்பை பாவம் செய்ய பலவந்தம் பண்ணினாள் (ஆதி 39:7-20)
2) ஆமானின் மனைவி சிரேஷ் = மொர்தெகாயை தூக்கில் போட 50 முழு உயரமான தூக்கு மரம் செய்ய தன் புருஷனுக்கு ஆலோசனை சொன்னவள் (எஸ்தர் 5:14, 7:9)
3) அனனியாவின் மனைவி சப்பீராள் = பேதுருவிடம் துணிகரமாய் பொய் சொல்லி தன் புருஷனோடு அந்நேரமே விழுந்து செத்தாள் (அப்போ 5:1-11)
4) பிலிப்புவின் மனைவி ஏரோதியாள் = ராஜாவாகிய ஏரோதோடு விபச்சாரம் செய்தது மட்டுமின்றி யோவான் ஸ்நானனைக் கொலை செய்யவும் காரணக்காரியாயிருந்தாள் (மாற் 6:17-29, மத் 14:3-11)
5) ஆதாமின் மனைவி ஏவாள் = கனியை புசித்து தானும் பாவம் செய்து தன் புருஷனையும் பாவம் செய்யப் பண்ணினாள் (ஆதி 3:6)
6) லோத்தின் மனைவி = லோத்தின் மனைவி ஜீவன் தப்ப மலைக்கு ஓடிப்போகும் போது பின்னிட்டு பார்த்து உப்புத்தூண் ஆனாள் (ஆதி 19:26)
7) யோபுவின் மனைவி = புருஷனிடம் ஏராளமான நன்மைகள் பெற்றவள் துன்ப காலத்தில் புருஷனை பார்த்து "தேவனை தூஷித்து ஜீவனை விடும்" என்றாள் (யோபு 2:9,10/19:17)
8) உரியாவின் மனைவி பத்சேபாள் = தாவீது கண்டு இச்சித்து பாவம் செய்யக்கூடிய நிலையில் ஸ்நானம் பண்ணினாள் (2 சாமு 11:1-17)
9) ஆகாபின் மனைவி யேசபேல் = பொல்லாப்பு செய்ய தன் புருஷனை தூண்டிவிட்டாள் (1 இராஜ 18:13)
10) தாவீதின் மனைவி மீகாள் = தன் புருஷன் ஆடி பாடுவதை கண்ட அவள் தன் இருதயத்தில் அவனை அவமதித்தாள் (2 சாமு 6:14-16)
11) மாகாள் = (யெரோபெயாமின் மனைவி) தன் கணவன் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்யாத போது அந்த தவறை சீர்படுத்தாமல் அவனை போலவே தானும் கர்த்தருடைய பார்வைக்கு அருவருப்புகளை செய்து வந்தாள் (2 இராஜ 15:3)
12) மார்த்தாள் = தேவ சமுகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை, அநேக காரியங்களை குறித்து கவலைப்பட்டு கலங்கினாள் - லூக் 10:39-42
13) தீனாள் = ஊர் சுற்ற போனாள் - ஆதி 34:1-31
14) புத்தியில்லாத கன்னிகை = மணவாளன் வருகைக்கு ஆயத்தமாயிருக்கவில்லை - மத் 25:1-10
No comments:
Post a Comment