அவரை நோக்கி
சங்கீதம் 123:2
இதோ, வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், வேலைக்காரியின் கண்கள் தன் எஜமாட்டியின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது.
*1.அவரை நோக்கி விண்ணப்பம்பண்ண வேண்டும்*
========================
*யோபு 22:27*
நீர் அவரை நோக்கி விண்ணப்பம்பண்ண, அவர் உமக்குச் செவிகொடுப்பார். அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளைச் செலுத்துவீர்.
*2. அவரை நோக்கிக் காத்திருக்க வேண்டும்*
========================
*சங்கீதம் 25:3*
உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும், முகாந்தரமில்லாமல் துரோகம்பண்ணுகிறவர்களே வெட்கப்பட்டுப் போவார்களாக.
*3. அவரை நோக்கி அமர்ந்திரு*
========================
*சங்கீதம் 62:5*
என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு, நான் நம்புகிறது அவராலே வரும்.
*4. அவரை நோக்கி பார்க்க வேண்டும்.*
========================
*ஏசாயா 45:22*
பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள், அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள், நானே தேவன், வேறொருவரும் இல்லை.
*5. அவரை நோக்கிக் கூப்பிட வேண்டும்*
=======================
*எரேமியா 33:3*
என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.
*6. அவரை நோக்கி ஒடக்கடவோம்*
========================
*எபிரேயர் 12:1*
ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.
=======================
No comments:
Post a Comment