In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Tuesday, September 14, 2021

பால் யாங்கி சோ | நல்ல ஒரு விசுவாச வீரர் | புத்த மதத்தை சேர்ந்த இவர் இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டதினால் இவரை வீட்டை விட்டு விரட்டியடித்தனர்

 


*பால் யாங்கி சோ *

*உலகத்தில் அதிக விசுவாசிகளை உடைய

சபை...தென் கொரியாவின் சீயோல்

பட்டணத்தை சார்ந்த போதகர் பால் யாங்கி சோ

நல்ல ஒரு விசுவாச வீரர்...

*புத்த மதத்தை சேர்ந்த இவர் இயேசுவை

இரட்சகராக ஏற்றுக்

கொண்டதினால் இவரை வீட்டை விட்டு

விரட்டியடித்தனர்...

*தன்னுடைய குடும்பத்தினர் வெறுத்தாலும்

இவர் தன்னுடைய குடும்பம் இரட்சிக்கப்படும்

என்ற விசுவாசத்துடன் (அப் _16:31) வசனத்தை

உறுதியுடன் பிடித்து ஜெபம் பண்ணி

கொண்டிருந்தார்...


*வீட்டை விட்டு துரத்தியதால் இவர் தன்

தகப்பனாருக்கு அடிக்கடி கடிதம் எழுதுவார்

...ஆனால் பதில் கடிதம் வராது

...இதனால் இவர் அநேகம் முறை சோர்வுற்றாலும்

இடைவிடாமல் இந்த வசனத்தை பிடித்து

ஜெபித்து கொண்டே இருந்தார் ...

*2வருடம் சென்ற பின் ..அவருடைய

தகப்பனார் தொழிலில் நஷ்டம்

அடைந்ததை கேள்விப்பட்டு அவரை சந்திக்க

செல்கிறார் .பால் யாங்கி சோ...

*அவரது அப்பா இவரை பார்த்த போது

# நீ தான் இந்த தோல்விகளுக்கு எல்லாம்

காரணம் ..

# நீ கிறிஸ்துவன் ஆனதினால் புத்தருடைய

ஆவியும், நம் முற்பிதாக்களின் ஆவியும் என்

மேல் கோபமாக இருக்கிறார்கள்

# அதனால் நான் தொழிலில்

நஷ்டம் அடைந்துவிட்டேன்.அதனால் நான்

தற்கொலை செய்து

கொள்ள போகிறேன்

# என்னுடைய நஷ்டத்திற்கு நீ தான் காரணம்

என சொல்லி இவரை திட்டுகிறார் ...

*பால் யாங்கி சோ வேதாகம கல்லூரியில்

படித்து கொண்டிந்த தன்

நண்பர்களின் உதவியால் தன்னுடைய

அப்பாவின் தயாரிப்புகளை விற்கும் படியாக

செய்கிறார் ...

*அப்பா நீங்கள் ஒரே ஒரு முறை எங்கள் ஆலய

ஆராதனை.க்கு வந்து கலந்து

கொள்ளுங்கள் ...அப்பொழுது

என் நண்பர்கள் உங்களுக்கு

தொடர்ந்து உங்கள் தயாரிப்புகளை

விற்கும் படியாக உதவுவார்கள் என

சொல்ல ..

*அவரது தகப்பனாரும் சரி ...நமது

தயாரிப்புகளை அவர்கள் விற்கிறார்களே என

சொல்லி அவரும் ஆலய ஆராதனைக்கு

செல்ல சம்மதிக்கிறார் ...

*சோ வுக்கு ஒரே மகிழ்ச்சி ...அப்பாவை கூட்டிக்

கொண் டு ஆலயத்துக்கு

செல்கிறார் ...

*அன்று அமெரிக்க மிஷனெரி

ஒருவரின் பிரசங்கம் ..அதை மொழி

பெயர்ப்பவர் நம்ம சோ .

*வந்தவருக்கு கொரிய பாஷை

தெரியாது ...அவர் பிரசங்கம் பண்ண

....நம்ம சோ உள்ளத்தில் ஆண்டவரை நோக்கி கதறி !

என்னுடைய தகப்பனாருக்கு கிடைத்த இந்நாளில்

இவரை இரட் சியும் என மன்றாடி இவர் ஒரு வேற

பிரசங்கம் பண்றார் ..

*2பிரசங்கம் ஓடுது ...மிஷனெரி ஒரு

பிரசங்கம் பண்றார்...சோ ...தன்னுடைய தகப்பன

இரட்சிக்கப்படனும் என்ற ஏக்கத்துடன் இவர்

ஒரு பிரசங்கம் .

*தலை குனிந்த கொண்டிருந்த அவரது

தகப்பனார் தலை நிமிர்ந்து பிரசங்கத்தை உற்று

கவனிக்கிறார்...

*கொஞ்ச நேரத்தில் அவருடைய இருதயம்

உடைந்தது. அவருடைய கண்களில் இருந்து கண்ணீர்

வழிகிறது ...

*இதை சோ பார்க்கிறார் ...இவருக்கு ஒரு டவுட்

# அவர் மனம் திரும்பி அழுகின்றாரா? அல்லது

# தொழில் நஷ்டத்தினால் தன்

வறுமையை எண்ணி அழுகிறாரா? என

புரியாமல் முழிக்கிறார்

*கூட்டம் முடிகிறது ..அப்பாவை நோக்கி வருகிறார்

சோ ..

*அவர் முகத்தில் ஒரு பிரகாசத்தை பார்த்து

விட்டு நீங்கள் கிறிஸ்தவனாகி விட்டீர்கள்

..ஆண்டவர் உங்களை தொட்டு விட்டார்

என சொல் லும் போது. ...

*அதற்கு அவரது அப்பா "மகனே நான்

ஆலயத்துக்கு வருமுன்னே உன்னை பரிகாசமும்

கிண்டல் பண்ணி கொண்டிருந்தேன் ...

*இங்கே நான் உட்கார்ந்திருந்த போது

திடீரென்று என் கண்கள் கூசியது

....அப்பொழுது இயேசு தோன்றி என்னை

பெயர் சொல்லி அழைத்து ...

*எவ்வளவு காலம் என்னை எதிர்த்து நிற்க

போகிறாய்? என்றார்! உடனே அவர் தான்

ஜீவனுள்ள தேவன் என்பதை அறிந்து என்

பாவத்தையெல்லாம் அறிக்கையிட்டு

மன்னிக்கும் படி வேண்டினேன் ...

*அப்பொழுது தேவ சமாதானமும்,

சந்தோசமும்,நம்பிக்கையும், என்னில் வந்தது

...இப்பொழுது நான் மிக

மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றுi

சொல்ல

*சோ வுக்கு ஒரே மகிழ்ச்சி! !!தேவனுக்கு நன்றி

செலுத்தி விட்டு தன் தகப்பன் மன

மாற்றத்திற்காக தேவனை துதிக்கிறார் ....

*அதுவரை தகப்பனை கண்டு பயந்த சோ ..அவருடைய

மன மாற்றத்ததை கண்டு மகிழ்கிறார்

..அல்லேலூயா !!!

*நான் நாளைக்கே நமது கிராமத்திற்கு போய்

எனக்கும் இயேசுவுக்கும் உள்ள உறவை

சொல்லப் போகிறேன் என கிளம்பி

*கிராமத்துக்கு செல்கிறார் ...இவர்

வெறுங்கையோடு வந்ததினால்

வியாபாரத்தில் நஷ்டம் அடைந்தினால்

தன்னை அடிப்பாரோ என அவரது மனைவி

பயத்துடன் காணப்பட்டதை பார்த்த இவருக்கு

தன்னிலே வெட்கமாக இருந்தது ...

*அடுத்த நாள் கால வேளையிலே இவர்

முழங்கால் படியிட்டு தன் குடும்பத்து

ஜனங்களுக்கு முன்பாக "தேவனே !!!என்னுடைய

மனைவியை கொடுமை படுத்தின காரியத்தை

மன்னியும் !!!



*"நீர் என் இருதயத்தில் வந்து விட்ட படியினால்

என் குடும்பத்து மக்களிடையே பயமுறுத்தி ஆளுகை

செய்யாமல் அன்போடு நடந்து

கொள்ள உதவி செய்யும் என

ஜெபிக்க...

*இவரது மனைவியும் இவரது மனமாற்றத்தை

கண்டு நானும் இந்த அன்புள்ள

ஆண்டவராகிய

இயேசுவை ஏற்றுக் கொள்ளவே

விரும்புகிறேன் என மகிழ்ச்சியோடு ஏற்றுக்

கொள்ளுகிறார்கள் ...

*இதைக்கண்ட சோ வின் சகோதரிகள் நாங்களும்

இயேசுவை அறிய வேண்டும் என சொல்லி

சோ விற்கு ம.தந்தி கொடுத்து

வரவழைக்கிறார்கள்...

*எந்த வீட்டில் துரத்தினார்களோ அதே வீடு சோ வை

வரவேற்கிறது ...அல்லேலூயா !!!!

*அளவில்லா மகிழ்ச்சி யோடு சொந்த

வீட்டிற்கு திரும்பி வருகிறார்...உற்சாகமாக

இயேசுவை பற்றி சொல்கிறார்! !!

*அந்நாளில் 11பேர் அவரது குடும்பத்தில்

உள்ளவர்கள் இரட்சிக்கப்படுகிறார்கள்..அல்லே

லூயா !!!!

*ஒ !!எவ்வளவு அற்புத சாட்சி! !!என் உள்ளத்தை

தொட்ட சாட்சி இது! !!

*குடும்பத்தில் ஒருவர் இரட்சிக்கப்பட்டிருந்தாலே

அந்த இரட்சிக்கப்பட்ட நபர் தேவனை

விசுவாசிக்கிறதினிமித்தம் அவர்களுடைய முழு

வீட்டாரையும் இரட்சிக்க நம் தேவன் வல்லவரே!!!

*நீங்களும் கூட என் குடும்பத்தில் நான் மட்டுமே

இரட்சிக்கப்பட்டுள்ளேன் ...எனது குடும்பமும்

இரட்சிக்கப்பட வேண்டும் என

ஜெபிக்கிறீர்களே! !!

*உங்களுடைய விசுவாச ஜெபத்தை கேட்டு

உங்களுடைய முழுக்குடும்பத்தையும் இரட்சிக்க இயேசு

வல்லவரே! !!சோர்ந்து போகாதீர்கள்...

*இயேசுவினிமித்தம் உங்களை புறக்கணித்திருப

்பார்கள் என்றால் அவர்களே உங்களை திரும்ப

அழைத்து எங்களுக்காக ஜெபி !!!தேவன்

உன்னோடு இருக்கிறார்! !என்ற சூழலும்

உருவாகும் !!!

*கர்த்தராகிய இயேசுவை விசுவாசிக்கிற

உங்கள் நிமித்தம் உங்கள் வீட்டார் அனைவரும்

இரட்சிக்கப்படுவார்களாக! !!ஆமென்! !!

அல்லேலூயா !!!

*THANK U JESUS! !!GLORY TO GOD! !!!்

No comments:

Post a Comment

Post Top Ad